சுவை மிகுந்த புதினா புலாவ் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1/2
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
புதினா - 1 கட்டு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 1

செய்முறை:
 
முதலில் அரிசியை தண்ணீரில் ஒரு 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து, பின்பு சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு மிக்ஸியில் புதினா, தேங்காய் துருவல், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு பேஸ்ட்டு போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
 
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பின் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி விடவேண்டும். இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால், சுவையான புதினா புலாவ் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்