இயக்குனர் சுதந்திரத்தில் தன் மூக்கை நுழைத்த சிம்பு.. கோ படத்தில் இருந்து வெளியேற இதுதான் காரணம்!

சனி, 15 மே 2021 (14:07 IST)
இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த கோ படத்தில் பின்னர் ஜீவா நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கிய திரைப்படங்களில் ஒன்று ’கோ’. ஜீவா, கார்த்திகா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒருசில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஜீவா அந்த படத்தில் ஜீவா நடிக்க வெளியானது. இந்நிலையில் கோ படத்தில் சிம்பு நடித்திருந்த சில காட்சிகளின் புகைப்படங்கள் கூட சமீபத்தில்  வெளியாகி கவனம் ஈர்த்தன.

இந்நிலையில் இப்போது சிம்பு ஏன் அந்த படத்தில் இருந்து விலகினார் என்று தெரியவந்துள்ளது. அந்த படத்தின் கதாநாயகியாக கே வி ஆனந்த் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவை தேர்வு செய்திருந்தார். ஆனால் சிம்பு அப்போது முன்னணி நடிகயாக இருந்த தமன்னாவை தேர்வு செய்ய சொல்ல, இது சம்மந்தமாக கேவி ஆனந்துக்கும் அவருக்கும் எழுந்த கருத்து வேறுபாட்டால்தான் சிம்பு விலகினாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்