மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி… இந்த முறை எந்த ஹீரோவுக்கு தெரியுமா?

வியாழன், 21 ஜனவரி 2021 (16:41 IST)
பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் இயக்குனர் இயக்கும் சலார் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது அவர் ராதே ஸ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அடுத்து, தீபிகா படுகோனேவுடன் ஆதி புருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் அவர் கேஜி எப் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றது. சில நாட்களுக்கு முன்னர் படத்தின் பூஜையும் போடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் இப்போது படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி பேட்ட மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்