நடிகர்கள் சூரி மற்றும் விமலால் சஸ்பெண்ட் ஆன 3 காவலர்கள்!

வெள்ளி, 24 ஜூலை 2020 (14:42 IST)
நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகிய இருவரும் தடையை மீறி சுற்றுலா சென்ற சர்ச்சை வழக்கில் மூன்று வேட்டை தடுப்பு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்கு அங்குள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகளுகுத் தடைவிதிகப்படுள்ள நிலையில் நடிகர்கள் சூரி மற்றும் விமர் ஆகிய இருவரும் அங்குள்ள பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்து அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி கடந்த ஜூலை 17 ஆம் தேதி அங்கு இருவரும் மீன் பிடித்தது தெரியவந்தது. எனவே இருவருக்கும் தலா ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர்கள் இருவருக்கும் தடையை மீறி உதவி செய்ததாக 3 வனத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்