பிக்பாஸ் வீட்டில் நுழையும் சுசித்ரா... சர்ச்சைக்கு கொஞ்சமும் குறையே இருக்காது!

செவ்வாய், 20 அக்டோபர் 2020 (15:40 IST)
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இதில் வைல்ட் கார்டு போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா நுழைந்துள்ளார். இதையடுத்து தற்ப்போது பாடகி சுசித்ரா பிக்பாஸ் போட்டியாளராக நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுசித்ரா ஏற்கனவே நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் சில நாட்கள் தலைமறைவாகியிருந்தார். சுசிலீக்ஸில்  என அன்றாடம் ஒரு ஷாக்கிங் வீடியோ வெளியாகி நடிகர் நடிகைகளின் மடியில் நெருப்பை அள்ளி கொட்டியது.  இன்னும் இவர் பிக்பாஸில் நுழைந்துவிட்டால் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது. இதை கருத்தில் கொண்டுதான் இவரை பிக்பாஸில் தூக்கிப்போட திட்டமிட்டுள்ளனர். விரைவில் துகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்