மீண்டும் சிம்பு & சுசீந்தரன் கூட்டணி தொடர்வதில் சிக்கல்!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:13 IST)
ஈஸ்வரன் படத்துக்குப் பின்னர் சிம்பு மற்றும் சுசீந்தரன் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தை சுசிந்தரன் ஒரு மாதத்துக்குள் இயக்கி முடித்து கோலிவுட்டை ஆச்சர்யப்பட வைத்தார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது. மாஸ்டர் எனும் பெரும் புயலுக்கு இடையில் ஈஸ்வரன் கவனிக்கப்படாமலே போனது. இந்நிலையில் ஈஸ்வரன் படம் முடியும் முன்னரே இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் உருவாக்குவது என முடிவு செய்தனர்.

அதனால் இப்போது சுசீந்தரன் அதற்கான வேலைகளில் இறங்கிய போது தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லையாம். 20 கோடி ரூபாய் பட்ஜெட் என சுசீந்தரன் சொல்வதும் ஈஸ்வரன் படத்தின் வசூல் விவரங்களுமே தயாரிப்பாளர்களின் அச்சத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்