முத்தக் காட்சிகளை எப்படி படமாக்குவது? புலம்பும் இயக்குனர்!

திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:20 IST)
கொரோனாவுக்குப் பின்னர் நெருக்கமானக் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறோம் என பாலிவுட் இயக்குனர் புலம்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதியில் இருந்தே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும் இப்போது மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளதை அடுத்து சினிமாவில் தினப்படி சம்பளத்துக்கு வேலை செய்யும் 25,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சீரியல் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா முடிந்ததும் முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறோம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ளார் பாலிவுட் இயக்குனர் ஷுஜித் சிர்கார். இதற்கு ரசிகர்கள் முதலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம். பிறகு அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்