சிம்புவோடு நடிக்க மறுத்த கௌதம் மேனன்! ஏன் தெரியுமா?

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (16:44 IST)
நடிகர் சிம்புவோடு கௌதம் மேனன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளது பற்றிக் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இப்போது வில்லனாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை தயாரிப்பாளர் கே ஞானவேல் ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கௌதம் மேனன் ‘முதலில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என சொன்னபோது நான் மறுத்தேன். ஏனென்றால் சிம்பு கேமரா முன்னால் நிகழ்த்தும் மாயாஜாலம்தான். ஆனாலும் என்னால் முடிந்த அளவுக்கு நடிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்