எஸ் பி பிக்கு மணல் சிற்பம் … ஒடிசா ரசிகரின் அஞ்சலி!

சனி, 26 செப்டம்பர் 2020 (17:01 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர்  ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு நாடு கடந்தும் அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சமூகவலைதளங்களிலும் நேரிலும் சென்று லட்சக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் அம்மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து, அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்