சினிமா…சின்னத்திரை படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தம் – ஆர்.கே.செல்வமணி

திங்கள், 15 ஜூன் 2020 (21:19 IST)
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட வேண்டும் என மருத்துவ குழுவினர் முதல்வரிடம் வலியுறுத்திய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி பொது முடக்கம் அமலுக்கு வருவதாக தமிழக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசு அறிவித்த தளர்வுகளுடன் சில விதிமுறைகளுக்கு உட்படு இயங்கி வந்த சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்சன்  பணிகளையும் செல்வமணி  வரும் ஜூன் 19 முதல்  நிறுத்த பெஃப்சி அறிவுறித்தியுள்ளதாக ஆர்.கே.  செல்வமணி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தப்பட வேண்டும் என செல்வமணி அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்