கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீடு... அர்ச்சனாவுக்கு மசியாத பாலா!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:33 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்று ஆரிக்கும் பாலாவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் நிகழ்ச்சியை சூடுபிடிக்க செய்தது. ஆரி, அர்ச்சனா மற்றும் நிஷாவை பற்றி நேற்று கூறிய அத்தனையும் 100% உண்மை என்பது அனைவருக்கும் தெரிவந்துள்ளது. 
 
பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக விளையாடிக்கொண்டிக்கும் ரியோ டைட்டில் வின் செய்யவேண்டும் என அர்ச்சனா மற்றும் நிஷா செயல்பட்டு வருகின்றனர். அவர் ஜெயிக்கவேண்டும் என்றால் இவர்கள் என் வீட்டிற்குள் வந்தார்கள்? வெளியில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கலாமே என ஆரி கூறினார். அத்துடன் ரியோவிற்கு நிஷா அர்ச்சனா இருவரும் துணிகள் துவைப்பது அவருக்கு வேண்டிய வேலைகளை செய்வது என 
ராஜா வீடு கண்ணுகுட்டியாக இருக்காங்க என்று ஆரி கூறினார். 
 
இந்நிலையில் தற்ப்போது இன்று வெளியாகியுள்ள முதலாவது ப்ரோமோவில்,  பிக்பாஸ் வீடு கால் சென்டராக மாறி ஒருவருக்கொருவர் மனதில் நினைப்பதை போன் மூலமாக வெளிப்படையா கேட்கின்றனர். அப்போது அர்ச்சனா பாலாவிடம், " உங்களுக்கு ரொம்ப பிடித்தவர்களை முன் வைத்து விளையாடுகிறேன் என கேட்டீர்கள் அது யார் யார் என்று சொல்ல முடியுமா என்றதற்கு,  சோம் , ரியோ , கேபி என கூறினார். அவரசத்தில் உளறாதே பாலா... 3வது ஆள் நிஷா கேபி இல்ல... கேபிலாம் மத்தவங்க பேச்ச கேட்டு விளையாடற மாதிரி தெரியல என மக்கள் கூறி வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்