ஏரியில் காணாமல் போன நடிகையின் உடல் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

செவ்வாய், 14 ஜூலை 2020 (11:02 IST)
ஹாலிவுட் நடிகையான நயா ரிவேரா காணாமல் போன ஏரியில் இருந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலவேறு ஆங்கில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை நயா ரிவெரா. அவர் தனது 4 வயது கலிபோர்னியாவில் உள்ள பிரு  என்ற ஏரியில் ஒரு படகை வாடகைக்கு எடுத்து தனது 4 வயது ஜோஸியுடன் சவாரி சென்றுள்ளார் நயா. நீண்ட நேரமாகியும் திரும்பாத அவரது படகை மற்றொரு படகில் சென்ற பயணி ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். அதில் நயாவின் மகன் மட்டும் இருந்துள்ளான்.

இதையடுத்து அவர் போலிஸுக்குத் தகவல் சொல்லவே, அவர்கள் ஏரியில் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது மகனிடம் நடத்திய விசாரணையில் நயா ஏரியில் நீந்த சென்றதாகவும், ஆனால் திரும்பி படகுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் நயாவை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது கலிபோர்னியா போலிஸ். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கலிபோர்னியா மாகாணத்தின் போலீஸார் கடுமையான தேடுதல் நடத்தி வந்தனர்.

இதையடுத்து நேற்று ஏரியின் வடக்குக் கரையில் ஒரு உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த உடலில் ஆடையை வைத்து அது நயாதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடலில் லைப் ஜாக்கெட் இல்லாததால் இது தற்கொலையா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நயா தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நாங்கள் இருவர் மட்டுமே எனப் பகிர்ந்திருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்