சினிமாவில் பெண்கள் மட்டும்தான் போதை பொருட்கள் பயன்படுத்துகின்றனரா? குஷ்பு அதிரடி!

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (19:30 IST)
சமீபகாலமாக பாலிவுட்டில் போதைப் பொருட்கள் பழக்கம் அதிகமாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுஷாந்த்  சிங்கின் மரணம் சம்மந்தப்பட்ட வழக்கில் போதை பொருள் பயன்படுத்தியவர்கள் குறித்து ஒரு பட்டியலைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரோபர்த்தி கைதாகி உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 15 நடிகர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல்கலும் வெளியானது.

இந்நிலையில், ரியா சக்கரவர்த்தியிடம் விசாரித்ததில் சில நடிகர், நடிகைகளின் பெயரை அவர் கூறியதாகவும் அவர்களுக்கு என்சிபி பிரிவினர் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது. இதில், சாரால் அலிகான்,சியொன் கபொட்டா,ரகுல் ஃபிரீத்சிங் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் இவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்படலாம் எனவும் சொல்லப்பட்டது.

இந்த விசாரணை வட்டத்துக்குள் இதுவரை சினிமா நடிகைகள் மட்டும்தான் வந்துள்ளனர். ஆனால் நடிகர்கள் யாரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. இதுகுறித்து நடிகை குஷ்பு ‘ஏன் நடிகைகள் மட்டும் போதைப் பொருள் வழக்கில் விசாரிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் யாருமே போதைப் பொருள் பயன்படுத்தவில்லையா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்