நடிகர் விஷால், சுந்தர் . சி இணையும் அடுத்த அதிரடி ஆக்‌ஷன் படம்!

புதன், 1 ஏப்ரல் 2020 (21:54 IST)
நடிகர் விஷால் நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். பின்னர், செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

அதன்பின், பல அதிரடி படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது, விஷால் துப்பறிவாளன் 2 என்ற படத்தை இயக்கிவருகிறார். அடுத்து சக்ரா என்ற படத்தை எம்.எஸ்.ஆனந்த இயக்குவார் எனவும் அதில் விஷால் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

இப்படத்தையடுத்து, சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து ஆமபள, ஆக்‌ஷன், மதகதராஜா ஆகிய மூன்று படங்களை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் அடுத்த படமும் அதிரை ஆக்‌ஷன் படம் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்