VTV 2 கள்ளக்காதலா...? மொய்க்கும் இணையவாசிகளுக்கு கெளதம் மேனன் பதில்!

செவ்வாய், 26 மே 2020 (08:41 IST)
கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக் என்ற கேரக்டரில் சிம்புவும், ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த கேரக்டர்கள் இன்னும் பல காதலர்கள் மனதில் கூடி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து VTV ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் இயக்க வேண்டும் என கௌதம் மேனனுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் குறும்பட வடிவில் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டமாக ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். வெறும் 12 நிமிடங்கள் கொண்ட     இந்த ஷார்ட் பிலிமில் சிம்பு (கார்த்திக்) - திரிஷா (ஜெஸி) கேரக்டரில் நடித்து மீண்டும் காதலில் கரைய வைத்தனர்.

இந்நிலையில் திருமணமான பெண்ணை " நீ எனக்கு வேணும்... ஒருமுறை ஐ லவ் யூ சொல்லு... என்பதெல்லாம் கள்ளக்காதலை ஊக்குவிக்கும் விதத்தில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் திரவுபதி பட இயக்குனர் மோகன் “நிறைய இளைஞர்கள் உங்கள் படங்களை பின்பற்றுகின்றனர். அவர்கள் மனதில் விஷத்தை கலக்க முயற்சி செய்யாதீர்கள்” என கெளதம் மேனனை விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கெளதம் மேனன் " அவரவர் எப்படி அதை எடுத்துக்கொள்கிறார்களோ அதுவாகவே இருக்கட்டும். நீங்கள் கள்ளக்காதல் என்று நினைத்தாள் அது கள்ளக்காதல் தான். ஆனால், என்னைப்பொறுத்தவரையில் அது கள்ளக்காதல் இல்லை என அழுத்தமாக பதிலளித்துள்ளார். இதையடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகமும் இனிதே ஸ்டைலில் தான் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்