மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா

ஞாயிறு, 18 நவம்பர் 2018 (06:53 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் குவித்தது. மந்தனா அபாரமாக விளையாடி 87 ரன்களும் கேப்டன் கவுர் 43 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 168 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் அரையிறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இறுதிப்போட்டி வரும் 25ஆம் தேதி நடைபெறும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்