தோனி என கத்தாதீர்கள்... ரசிகர்களுக்கு விராட் கோலி அறிவுரை...

வியாழன், 5 டிசம்பர் 2019 (20:10 IST)
இந்திய கிர்க்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் கீப்பிங் செய்யும் போது, பந்தை மிஸ் செய்தால், தோனி என்று கத்தக் கூடாது என கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கு அறிவுரை  கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்த தோனி, தற்போது ஓய்வில் இருக்கிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வங்க தேசத்துக்கு எதிராக டெஸ்ட் போடியின் போது,  விக்கெட் கீப்பிங் செய்த ரிஷப் பாண்டே சரியாக விக்கெட் கீப்பிங் செய்யவில்லை எனவும்,அவர் அவுட் செய்யும் வாய்ப்புகளை தவறவிடுகிறார் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன, மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங் செய்யும்போது, ரிஷப் பந்தை தவறவிட்டால், தோனி என ரசிகர்கள் கத்துகிறார்கள்.  
 
இதுகுறித்து விராட் கோலி கூறியுள்ளதாவது :
 
ரிஷப் பந்தை தவற விடும்போது, யாரும் தோனி என கத்த வேண்டாம். இது மரியாதைக் குரிய செயல் அல்ல.எல்லா வீரர்களும்  நாட்டுக்காக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்