சென்னை கடற்கரைகளில் இன்றும் நாளையும் அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:57 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சமீபத்தில் அறிவித்த அறிவிப்பு ஒன்றின்படி சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் சென்னையில் உள்ள கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இன்றும் நாளையும் தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ் வருட பிறப்பு விழாவை முன்னிட்டு கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதால் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு சென்னையிலுள்ள மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
சென்னை மக்களுக்கு இருக்கும் ஒரே இலவசமான பொழுதுபோக்கு கடற்கரை மட்டுமே என்று இருக்கும் நிலையில் அவற்றுக்கும் செல்ல அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருப்பது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்