நான் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் ’’இவர்தான்’’– கோலி உருக்கம்

வெள்ளி, 24 ஜூலை 2020 (16:52 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் போது நான் பேட்டிங்கில் சில தவறுகளை செய்தேன் அப்போது சச்சின் தான் எனது பேட்டிங் உத்தியை மாற்றினார் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான  டெஸ்டில்  10 இன்னிங்ஸ்கில் விளையாடிய கோலி,வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் சச்சின் டெண்டுல்கரிடன் சில ஆலோசனைகள் மற்றும் பேட்டிங் உத்திகளைப் பெற்று தன்னை ஸ்டைலை மாற்றிக் கொண்டதாக கூறியுள்ளார் கோலி.

மேலும் அந்தத் தொடரில் இருந்து நீக்கப்படுவதாக இருந்த என்னை சச்சின் கொத்த ஊக்கமுமவரது யுக்தியும் அத்துடன் என்னுடைய  பயிற்சியும் சேர்ந்ததால் என் தகுதியை நிரூபித்து என் இருப்பை தக்க வைத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார் கோலி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்