சதமடித்து அசத்திய ரோஹித் ஷர்மா… வலுவான நிலையில் இந்தியா!

சனி, 13 பிப்ரவரி 2021 (15:11 IST)
இந்திய அணி சற்று முன்னர் வரை 212 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியில் பூம்ரா, நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த புஜாரா நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். புஜாரா 14 ரன்களும் கேப்டன் கோலி டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். அதன் பின்னர் வந்த அஜிங்க்யே ரஹானே ரோஹித்துடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். தற்போது வரை இந்திய 212 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்