தந்தைக்கு மிகச்சிறந்த அஞ்சலியை செலுத்திய முகமது சிராஜ்!

செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:43 IST)
இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இதற்காக ஆஸ்திரேலியா சென்று பயிற்சி பெற்றுவரும் நிலையில் இந்தியாவில் அவரது முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்சனைக் காரணமாக மரணமடைந்தார். ஆஸ்திரேலியாவில் பயோ பபுளில் சிராஜ் இருந்த நிலையில் அவரை இந்தியா அனுப்ப கிரிக்கெட் வாரியம் தயாராக இருந்தும் முகமது சிராஜ்  அங்கேயே இருக்க முடிவு செய்தார்.

அப்போது சகோதரர் இஸ்மாயிலிடம் சிராஜ் ஆஸ்திரேலிய தொடரை சிறப்பாக விளையாடி கைப்பற்றி அந்த வெற்றியை தந்தைக்கு அஞ்சலியாக்குவேன் எனக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 5 விக்கெட்களைக் கைப்பற்றி தனது தந்தைக்கு வெற்றியைக் காணிக்கையாக்கியுள்ளார் சிராஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்