நான்காம் நாளில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து! கலக்கிய அஸ்வின்!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

இதையடுத்து நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் லாரன்ஸை அஸ்வின் அவுட் ஆக்கினார். இது அஸ்வினின் இரண்டாவது விக்கெட் ஆகும். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும், பேட்டிங்கில் ஒரு சதமும் அடித்த அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து அணி இன்னும் 394 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்