கீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில!

எவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார் ஆசைகளிலிருந்து விடுபட்டு, நிலையற்ற பொருட்கள்மீது உரிமை கொண்டாடாது, அமைதி அடைகிறானோ, அவனே பிரம்மமாகத் தகுவான்.

மனிதன் தன் நினைவுகளால் ஆனவன்; அவன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்
 
* உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது, அதனை இழந்ததற்கு நீ அழ கூடாது!
 
* மானிடன் ஒருவன் தான், அவனது நண்பன்; பகைவனும் கூட.
 
* மரத்துண்டினைத் தீயின் வெப்பம் சாம்பல் ஆக்குவது போல, எல்லா கர்மங்களும் ஞானத்தின் பாற்பட்டு கருகும்!
 
* சந்தேகப்படும் ஒருவனுக்கு இந்த உலகத்திலும் சரி, வேறு எந்த உலகித்திலும், சந்தோஷம் என்பது சேகரித்து வைக்கப்படவில்லை.
 
* முட்டாள், அறிவும் ஆக்கமும் வெவ்வெறு என்று கருதுகின்றான்; சால்புடையவன் அவை ஒன்றென கருதுகிறான்!
 
* ஆசைகளைக் குறைத்து கொள்வதே மகிழ்ச்சியின் திறவுகோல்!
 
* நரகத்திற்கு மூன்று வாசற்படிகள் உள்ளன - பேரவா, க்ரோதம், காமம்!
 
* அழிப்பவரில் சிறந்தவன் என்று நான் எண்ணுவது, காலனையே! காலம் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்