இ-பாஸ் ரத்து செய்யாததற்கு இப்படியும் ஒரு காரணம்: காண்டாக்கும் உதயநிதி!

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (17:21 IST)
தமிழகத்தின் ஏன் இ-பாஸ் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள காரணம் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.   
 
இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.   
 
இ-பாஸ் முறையை ரத்து செய்யலாமா? வேண்டாமா? என முதல்வர் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் ரத்து செயப்படாதது இதற்காக தான் என ஒரு காரணத்தை உதயநிதி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களை எங்களால் சந்திக்க இயலவில்லை. அதனால்தான் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கூடிய விரைவில் இதுதொடர்பாக அறிவிப்புவரும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்