மேகதாது விவகாரம் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை கிடையாது : தமிழக அரசு அதிரடி

வெள்ளி, 30 நவம்பர் 2018 (14:11 IST)
மேகதாது அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என கூறிவிட்டு அணை கட்ட ஒப்புதல் பெற்றதால் கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை என்பது அர்த்தமற்றதாகிவிட்டது என டெல்லிக்கு சென்ற தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சி.வி சண்முகம் கூறியுள்ளதாவது:
 
மேகதாதுவிவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கர்நாடக அரசு முதலில் கூறியிருந்தது. இந்நிலையில் தீடீரென  ஒப்புதல்பெற்றுவிட்டு அணைகட்ட ஏற்பாடு செய்து வருவது தமிழக அரசை வஞ்சிக்கும் செயலாகும். மேலும், மேகதாது விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் தனது அதிகாரத்தை மீறியுள்ளது.
 
மேகதாது அணைவிவகாரத்தில் இனிமேல் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை கிடையாது இவ்வாறு சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
 
தமிழக அரசுடன் பேச தயார் என்று கர்நாடக அரசு கூறியிருந்த நிலையில் தமிழக அமைச்சர் சண்முகம் இவ்வாறு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்