இன்னுமா இந்த பிரச்சினை முடியல..? மீண்டும் பெரியார் சிலை சேதம்!

ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (09:11 IST)
சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகலில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டும் வரும் நிலையில் அவ்வாறான சம்பவம் திருச்சியிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்த விவகாரம் முடிந்து சகஜ நிலை ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சியில் மீண்டும் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. திருச்சி அருகே இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இரவோடு இரவாக வந்து காவி சாயம் பூசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்