இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது ஏப்ரல் 17ஆம் தேதி அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் மட்டும் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.