தமிழகத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா உறுதி ! 67 பேர் பலி

சனி, 10 அக்டோபர் 2020 (18:28 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  5242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தப் பாதிப்பு 6,51,360 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 5,97, 033 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 10,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 180751 ஆக அதிகரித்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்