’அது வேணும்ன்னு’ அடம்பிடித்த தம்பியின் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் ..

சனி, 15 டிசம்பர் 2018 (12:49 IST)
சென்னை கொருக்குப்பேட்டை கஸ்தூரி பாய் நகரில் வசித்து வருபவர் கணேசன். பெற்றோர் வேலைக்குபோக  சொல்லி உள்ளனர். ஆனால் வேலைக்கு போக விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். குடி பழக்கம் வேறு இருந்ததால் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளோரிடம் ரகளை செய்துள்ளார்.
அவருடைய அண்ணன் வெங்கடேசனிடமும் தனக்கு இரு சக்கர வாகனம் வாங்கிதர வேண்டும் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார்.
 
இந்நிலையில் கணேசன் இவ்வாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, மோதல் உருவாகி, அது சண்டையாக உருவெடுக்க..ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை  எடுத்து கணேசன் கழுத்தில் குத்து விட்டு வீட்டை விட்டு ஓடி விட்டார். கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
இது குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கணேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் தம்பியை கொன்ற வெங்கடேசன்அதே பகுதியில் பதுங்கி இருந்ததால் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்