ஊரடங்கால் வறுமை: குடும்பத்தை காப்பாற்ற வாழைப்பழம் விற்கும் 10 வயது சிறுவன்!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (07:51 IST)
குடும்பத்தை காப்பாற்ற வாழைப்பழம் விற்கும் 10 வயது சிறுவன்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கோடிக்கணக்கான வேலையிழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுவன் வாழைப்பழம் விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது குடும்ப சூழ்நிலையை உணர்ந்து தினசரி வாழைப்பழம் விற்று வருகிறார். ஒவ்வொரு தெருவுக்கும் சைக்கிளில் சென்று வாழைப்பழம் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்
 
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோதிலும் மனம் தளராமல் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வாழைப்பழம் விற்பனை செய்யும் அந்த சிறுவனை அந்தப் பகுதி மக்கள் பாராட்டி அவனிடம் வாடிக்கையாக வாழைப்பழங்களை வழங்கி வருகின்றனர் அந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்