பெட்ரோரில் 10% எத்தனால் கலப்பு - வாகனங்களுக்கு ஆபத்து!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (09:34 IST)
வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரொலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு. 

 
1. பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும்.
2. வாகனத்தை கழுவும்போதும், மழை பெய்யும்போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
3. பெட்ரோல் டேங்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு.
4. மத்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது.
5. எத்தனால் உள்ள பெட்ரோலில் தண்ணீர் இறங்குவதால் வாகனத்தை இயக்க கடினமாகும் (ஜெர்க்) ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்