பாலியல் குற்றவாளிகளை போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்! – யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு!

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (08:16 IST)
உத்தர பிரதேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் புகைப்படங்களை சாலையில் போஸ்டர்களாக ஒட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க உத்தர பிரதேச அரசு ஆண்டி ரோமியோ ஸ்குவாட் போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஈவ்டீசிங் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் புகைப்படங்களை உத்தரபிரதேசத்தின் பிரதான சாலை சந்திப்புகளில் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாலியல் குற்றவாளிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதோடு, குற்றவாளிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து குற்றத்தில் ஈடுபட தயங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்