பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறையாது – உ.பி., அரசு

வியாழன், 25 பிப்ரவரி 2021 (15:45 IST)
petrol and diesel

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கப்போவதில்லை என பாஜக அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் விற்பனையில்60 % மாகவும், டீசல் விற்பனையில் 54 % மாகவும் உள்ளது.

இந்நிலையில் உ.,பி மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்கப் போதிய நிதி தேவைப்படுவதால், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான விலை குறைய வாய்ப்பில்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது/.

சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் பெட்ரொல் டீசல் மீதான விலை குறைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்