சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள்: டபுள் மடங்கு வருமானம்!

ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (09:46 IST)
சபரிமலையில் வழக்கத்தை விட பக்தர்கள் வருகை அதிகமாகியுள்ளதாக கோவில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு செல்லும் சீசன் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜைகள் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. அதுமுதல் பல பக்தர்கள் சபரிமலைக்கு மாலைப் போட்டு நடைப்பயணமாக சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

கடந்த 13 நாட்களில் கோவிலுக்கு வருமானமாக 40 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 19 கோடியே வருமானம் பெற்ற நிலையில் இந்த ஆண்டு அது இரு மடங்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்