மார்ச் 16 முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

புதன், 22 ஜனவரி 2020 (22:50 IST)
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 16ஆம் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
இதன்படி இனி புதிதாக வழங்கப்படும் கிரெடிட், டெபிட் கார்டுகளைக் கொண்டு உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஏடிஎம், ஸ்வைப்பிங் மெஷின்களில் மட்டுமே இந்தப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
 
சர்வதேச அளவில் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் ஆன்லைன் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மார்ச் 16 முதல் இந்த புதிய கட்டுப்பாடு வருவதால் அதற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள ஏடிஎம் கார்களுகளுக்கு பதில் புதிய கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ள வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகளால் வங்கிப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்