”ராமர் கோவில் கட்ட நாங்கள் தான் காரணம்” சிவசேனா எம்.பி. பேச்சு

Arun Prasath

புதன், 18 டிசம்பர் 2019 (11:18 IST)
ராமர் கோவில் கட்டுவதற்கான அடித்தளம் அமைத்தது சிவசேனா தான் என எம்.பி.சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. மேலும் சமீபத்தில் அமித் ஷா, ”விண்ணை முட்டும் அளவுக்கு ராமர் கோவில் கட்டப்படும்” என ஜார்கெண்ட் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், ”விண்ணை முட்டும் அளவிற்கு ராமர் கோவில் கட்டப்படும் என அமித்ஷா கூறியுள்ளது சரிதான். ஆனால் ராமர் கோவிலுக்கான அடித்தளத்தை சிவசேனா தான் அமைத்தது என கூறியுள்ளார்.

மேலும், “ராமர் கோவில் கட்டுவதன் பிரதிபலன் சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட கோடிக்கணக்கான கரசேவகர்களை தான் சென்று சேரும், அந்த பிரதிபலன் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்