பிரசாந்த் கிஷோர் சொன்ன ஒரே அட்வைஸ்: 3வது முறை கெஜ்ரிவால் சிஎம்!!

புதன், 12 பிப்ரவரி 2020 (18:33 IST)
ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் வெற்றி பெற அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 
 
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
 
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான ஒப்பந்தத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட்ட போது ஒரே ஒரு அறிவுரை மட்டும் கெஜ்ரிவாலுக்கு வழங்கி உள்ளார். 
 
அதாவது எதிர்க்கட்சிகளுடன் மோதல் மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். மேலும், பிரதமர் மோடியை குறிவைத்து தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். இவரின் இந்த அறிவுரையே ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றியை தேடித்தந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்