மீண்டும் முழு ஊரடங்கா? மத்திய அரசு விளக்கம்!

வியாழன், 12 நவம்பர் 2020 (16:19 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது வருகிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊரடரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம் 
 
இந்த நிலையில் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாகவும் இதனால் மீண்டும் ஊரடங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது 
 
குறிப்பாக டெல்லி கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
கடந்த 7 மாதங்களாக முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான ஏழை எளிய நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் தற்போது தான் அவர்கள் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு என்றால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்