மாவோயிஸ்ட் எண்கவுண்டர்; 5 வீரர்கள் வீரமரணம்! – 15 ராணுவ வீரர்கள் மாயம்!

ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:10 IST)
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எண்கவுண்டரில் 15 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் பகுதியில் அடிக்கடி ராணுவத்தினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மீது இந்திய ராணுவத்தினர் என்கவுண்ட்டர் நடத்தினர்.

இதில் 9 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில் இந்திய ராணுவத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த எண்கவுண்டரில் 15 ராணுவ வீரர்கள் காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்