கூடாது ...வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்க கூடாது :சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு...

வெள்ளி, 12 அக்டோபர் 2018 (12:20 IST)
கடந்த வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் நாடெங்கிலும் இருந்து அவ்ர் மீது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதும் பல முக்கியமான முடிவுகளை  அவர் எடுத்து வருகிறார்.

அதில் குறிப்பாக முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை விசாரிக்க கூடாது.வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்க கூடாது  என்று நீதிபதிகளுக்கு இவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள  கீழமை நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்டில் 50பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்குகளை கருத்தில் கொண்டு விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டிய கடமை நீதிமன்றங்களூக்கு உள்ளன.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்