முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:15 IST)
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று அதிகாலை 12 மணிக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி அவர்களின் மூளையில் கட்டி இருந்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்