12 லட்சத்தை தாண்டிய பாதிப்பு; 30 ஆயிரத்தை நெருங்கிய பலிகள்! – இந்தியாவில் கொரோனா!

வியாழன், 23 ஜூலை 2020 (09:34 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் பாதிப்பில் ரஷ்யாவை தாண்டி மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது இந்தியா.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 12 லட்சம் பாதிப்புகளை தாண்டி இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 29,861 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,607 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,37,607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12556 பேர் பலியான நிலையில் 1,87,769 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,86,492 ஆக உள்ள நிலையில் 3,144 பேர் பலியாகியுள்ளனர். 1,31,583 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

டெல்லி – 1,26,323
கர்நாடகா – 75,833
குஜராத் – 51,399
உத்தர பிரதேசம் – 55,588
தெலுங்கானா – 49,259
மேற்கு வங்கம் – 49,321
ராஜஸ்தான் – 32,334
ஹரியானா – 28,186
மத்திய பிரதேசம் – 24,842

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்