முதல்வரின் போட்டோவை மார்ஃபிங் செய்த பாஜக நிர்வாகி அதிரடி கைது

புதன், 19 செப்டம்பர் 2018 (08:04 IST)
மேற்கு வங்க முதலமைச்சர் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்த பாஜக நிர்வாகியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேற்குவங்கம் மிட்நாபூர் மாவட்டத்தை சேர்ந்த பாபுயா கோஷ் என்ற பாஜக நிர்வாகி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ,ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இருவரும் ஒன்றாக கட்டிப்படித்தபடி இருப்பது போல் சில போட்டோக்களை மார்ஃபிங் செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
அதில் இருவரையும் ஒன்றாக இணைத்து சில அவதூறான வசனங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகவே, இதுகுறித்து சிலர் போலீஸிடம் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாபுயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்