2 மாதங்களுக்கு பின் அமெரிக்காவில் முதல்முறையாக குறைந்த பலி எண்ணிக்கை!

திங்கள், 11 மே 2020 (08:22 IST)
கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கினாலும் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா தான். இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 776 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். என்பதும், புதிதாக 20,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கடந்த இரண்டு மாதங்களாக 1000 முதல் 2000 பேர்கள் வரை கொரோனாவுக்கு பலியாகியிருந்த நிலையில் முதல்முறையாக அதாவது கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு அமெரிக்காவில்  பலி எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 13.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 79,522 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 264,663 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 264,663 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 219,183 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 219,070 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 209,688 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 176,970 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 41,80,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 283,860 பேர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்