51,000 புள்ளிகளைத் தாண்டி சென்செக்ஸ் புதிய சாதனை!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (09:30 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 51,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை தாண்டி 50,065 என்ற நிலையில் தற்போது விற்பனையானது. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 51,000 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 56 புள்ளிகள் அதிகரித்து 14,952 ஆக வர்த்தகமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்