3வது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை!

வியாழன், 21 ஜனவரி 2021 (10:36 IST)
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வரும் நிலையில் இன்றும் விலை அதிகமாகியுள்ளது.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.37,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 அதிகரித்து ரூ.4,691-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்