ரஜினி எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தால் சந்தோஷம் - கமல்ஹாசன்

வியாழன், 4 ஏப்ரல் 2019 (16:46 IST)
வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வருடம் கட்சி தொடங்கி இந்த வருடம் கெத்தாக தேர்தலைச் சந்திக்க உள்ளார் கமல்ஹாசன். அவரது மக்கள் நீதி கட்சியில் இருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக பல நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசனிடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தேர்தல் பிரசாரத்தில்  வாக்குசேகரிக்க மக்களிடம் செல்லும் போது அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. நல்ல திட்டங்கள் எங்கெங்கு இருந்தாலும் அவற்றை மக்களிடன் தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும்.
தேர்தலில் ரஜினி எனக்கு ஆதரவு தர வேண்டும் என திரும்பி திரும்பி வலியுறுத்த முடியாது. ஆனால் ரஜினி எனக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளார். ரஜினி எனக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. ரஜினி எனக்கு பிரசாரம் செய்தால் அது எனக்கு சந்தோஷம் தான் இவ்வாறு தெரிவித்தார்.
 
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து இன்னும் தன் கட்சி குறித்த நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்