தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆவாரம் பூ...!!

ஆவாரம்பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.

ஆவாரம் பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். வெயிலில் வெளியே செல்லும்போது  ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் நம்மை தாக்காது.
 
கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ. எனவே முடி உதிர்வு பிரச்சனை கூந்தலில் ஆவாரம் பூவை வைத்து கொண்டால் உடல்  உஷ்ணத்தினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, உடனே சரியாகும்.
 
ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல்  குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.
 
ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண்நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம்  வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்