பிக் பேஸ்கெட்டை தொடர்ந்து ப்ளிப்கார்ட்டுடன் கைக்கோர்த்த உபெர்!

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (12:39 IST)
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க ப்ளிப்கார்ட்டுடன் இணைந்துள்ளது உபெர். 
 
இது குறித்து உபெர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு... மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க பிக் பேஸ்கெட்டை தொடர்ந்து தற்போது ப்ளிகார்ட்டுடன் இணைந்துள்ளோம். 
 
இந்த சேவை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே தற்போது கிடைக்கும். விரைவில் விரைவில் மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படும். அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்களின் படி இந்த சேவை வழங்கப்படும். 
 
இதில், உபெரின் கார்கள் மற்றும் பைக்குகள் பயன்படுத்தப்படும். இந்த சேவைக்கு உபெர் எந்த கமிஷனையும் வசூலிக்காது. ஓட்டுநர்களுக்கே அனைத்தும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்