அடல்ட் இணையதளங்களுக்கு தடை விதித்த அம்பானி: பயனர்களின் ரியாக்‌ஷன் என்ன?

புதன், 31 அக்டோபர் 2018 (13:53 IST)
இந்தியாவில் குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சி அடைந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவெடுத்துள்ளது. 
 
பல சலுகைகளை குறைந்த விலையில் ஜியோ வழங்கி வந்தாலும், தற்போது ஜியோ மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை ஜியோவின் சில வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதாவது, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 857 அடல்ட் இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் தடைவித்தது. இந்த தடை உத்தரகண்ட் உயர்நீதிமன்ற கோரிக்கையினை ஏற்று முன்னெடுக்கப்பட்டது. 
 
இதனால், அரசில் ஆணையை மதித்து ஜியோ கிட்டத்தட்ட 100 அடல்ட் இணையதளங்களை தடை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதோடு, ஜியோ தனது வாடிக்கையாளர்களின் இணைப்பில் இருந்து அடல்ட் இணையதளங்களை அனுகுவதற்கும் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பால் பயன்ர்களின் ரியாக்‌ஷென் பயங்கரமாக உள்ளது, அவற்றில் சில,
 
சிங்கிள்ஸ் சாபம் உங்களா சும்மா விடாது டா...
இனி நான் இவ்வளவு ஜிபி டேட்டாவா வச்சு என்ன டா பண்றது...
குருநாதா (யுசி பிரவுசர்) நீ இங்கதான் இருக்கியா... 
ஆர்ஐபி ஜியோ... போன்ற பல மீம்கள் வெளியாகி உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்